நாமக்கல், பிப்.17:நாமக்கல்லில், கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் திருக்குறள் சிந்தனை அரங்கம் நடந்தது. நாமக்கல்லில், கவிஞர் சிந்தனை பேரவை சார்பில், நேற்று திருக்குறள் சிந்தனை அரங்கம், கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது. நூலகர் செல்வம் வரவேற்று பேசினார். கவிஞர் இல்ல நூலக வாசகர் வட்ட தலைவர் மோகன் முன்னிலை வகித்து பேசினார். சிந்தனை அரங்கத்தை, மாவட்ட நூலக அலுவலர் ரவி தொடங்கி வைத்து பேசினார்.