நாமக்கல், பிப்.17: நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெறுவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நாமக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய இடைத்தரகர்கள் மூலம் 40 கிலோ சிப்பத்திற்கு ₹40 லஞ்சம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் அரசின் நடவடிக்கை இருக்கவேண்டும்.