ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் வேதனை சாத்தூரில் கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

சாத்தூர். பிப்.17: சாத்தூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சாத்தூர் கிழத்தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுனர் ராதா. இவரது மூத்த மகன் மணிகண்டன்(15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குளிப்பதற்காக பெரிய கொல்லபட்டி விளக்கில் உள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் சென்றார். அப்போது நீச்சல் தெரியாததால் கிணற்று நீரில் மணிகண்டன் மூழ்கினார்.

அவருடன் வந்த நண்பர்கள் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் உடனடியாக சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த தீணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மணிகண்டனை சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாத்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: