ஆத்தூர், பிப்.17: ஆத்தூர் அருகே மாயமான முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், செல்ேபான் கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர் கண்ணாடி மில் முனியப்பன் கோயில் அருகில் வசித்து வருபவர் லட்சுமி(75). இவர் ஆத்தூர் டவுன் போலீசில் தனது 55 வயதான மகன் ராஜாவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அளித்த தகவலின் பேரில், சடலத்தை பார்வையிட்ட லட்சுமி, அது தன்னுடைய மகன் ராஜா என்பதை உறுதிபடுத்தினார்.