அந்தியூர், பிப்.17: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான ரத்ததான முகாம் நடந்தது. அந்தியூர், பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது, அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. அவசர தேவைக்கு சில நேரங்களில் ரத்தம் கிடைப்பதில்லை. இதைக்கருத்தில் கொண்டு ரத்ததான முகாம் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா தலைமையில் மருத்துவ பணியாளர்கள் ரத்ததான முகாமை நடத்தினர்.