புதுச்சேரி, பிப். 17: புதுச்சேரி லாஸ்பேட்டையில் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி விட்டு காதலியை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமா (27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டிப்ளமோ முடித்துள்ள இவர், புதுவை மரப்பாலம் தேங்காய்திட்டில் தாய்மாமாவின் வீட்டில் தங்கி, தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது உடன் வேலை செய்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. 4 வருடமாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி லாஸ்பேட்டை கெங்கையம்மன் கோயில் வீதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ரமாவை தங்க வைத்தார். அங்கு இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.