தக்கலை, பிப். 17: கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இதுபோல் இறைச்சி கழிவுகளை தீவனம் தயாரிப்பதற்காகவும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த வாகனம் செல்லும் பகுதிகளில் துர்நாற்றம் வீசி பொதுமக்களை கலங்கடித்து வருகிறது. இந்த நிலையில் தக்கலை போலீசார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. விசாரித்தபோது அதில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி திருநெல்வேலிக்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.