திருவள்ளூர், பிப்.17: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசர் அறிக்கை: திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (18ம் தேதி) மாலை 4 மணியளவில் திருவள்ளூரில் உள்ள பெரம்பூர் சீனிவாசா பார்ட்டி ஹால் முதல் மாடியில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன் தலைமையில் நடைபெற உள்ளது. நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்கிறார்.இதில் எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இ.பரந்தாமன், சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன், நடுகுத்தகை ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஜெ.ஜெய்மதன், கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.