கம்பம், பிப்.13: கம்பத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்ததால் மக்கள் வீதிகளில் நடமாட முடியவில்லை. எனவே நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பத்தில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். கம்பம் நகர் முழுக்க தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பவர்களை கடிக்க முயல்கிறது. டூவீலர்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. இதனால் சில நேரங்கள் விபத்து நடக்கிறது. குறிப்பாக கம்பம் காந்திஜி வீதி, நாட்டுக்கல், தாத்தப்பன்குளம், கம்பம்மெட்டு காலனி, வடக்குப்பட்டி போன்ற ஏரியாக்களில் நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் தெரு நாய்க்கு பயன்படுகின்றனர்.