சிவகங்கை, பிப்.13: சிவகங்கையில் உள்ள கல்லூரி மாணவிகள் போதிய பஸ் வசதியின்றி அவதிப்படுவதால் மகளிர் பஸ் மற்றும் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கையில் மன்னர் துரைச்சிங்கம் அரசுக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து அதிகப்படியான மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகின்றனர்.