அடைக்கலமாதா ஆலய தேர்பவனி

திருமயம், பிப். 13: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடைக்கல மாதா ஆலயத்தில் செபஸ்தியார் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் செபஸ்தியார் தேர்பவனி நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை திருப்பலி நடந்தது. அதன்பின்னர் மாதா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதைதொடர்ந்து மின்விளக்குகளால் செபஸ்தியார் சொரூப தேர்பவனி நடந்தது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும் இந்த தேர்பவனியில் பங்கேற்றனர்.

Related Stories: