வாடிப்பட்டி, பிப். 12: வாடிப்பட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்குமிடத்தில் கேட்பாரற்று மர்ம சூட்கேஸ் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் தற்போது விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு பயணிகள் நடமாட்டமில்லை. இந்நிலையில் அங்குள்ள பயணிகள் தங்குமிடத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது தொடர்பாக அப்பகுதியினர் வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.