முத்துப்பேட்டை, பிப். 12: முத்துப்பேட்டை ஆசாத்நகரை சேர்ந்தவர் முத்தையன்(40). இவர் பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் யூனியன் ஆபீஸ் சாலையில் இரும்பு கடை நடத்திவரும் முத்துராமலிங்கம் மகன் அழகர்(31), குமரையா(45) ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்த முத்தையனை வழிமறித்த அழகர், குமரையா ஆகிய இருவரும் இரும்பு கம்பியால் அவரது தலையில் சரமாரியாக தாக்கினர்.