திருவாரூர், பிப். 12: திருவாரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, வேளாண்மைத்துறை மூலம் உழவன் செயலியானது கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த உழவன் செயலி மூலம் விவசாயிகள் அரசின் மானிய திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு விவரம், பயிர்காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு விவரம், விதை இருப்பு விவரம், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்தல், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு,