திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருத்துறைப்பூண்டி அருகே வேளூரில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கிய போது போடப்பட்ட குடிநீர் பைப்புகள் உடைந்து அடிக்கடி குடிநீர் வீணாக ஒடுவதை கண்டுபிடித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு சரி செய்வது வாடிக்கையான ஒன்று. கோடை காலம் வந்து விட்டால் திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அடிக்கடி போராட்டம்,