நாமக்கல், பிப்.12: சிறுமிகளின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட ஓட்டல் தொழிலாளியை நாமக்கல் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட காவல்துறையின், சமூக ஊடகவியல் பிரிவினர் நேற்று சமூக ஊடகங்களை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது, பரமத்தி அருகேயுள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி(35), சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்துள்ளதை கண்டுபிடித்து எஸ்பி அருளரசுவிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்பி அருளரசு, உடனடியாக அவரை கைது செய்யும் படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாசுக்கு உத்தரவிட்டார்.