நாகை,பிப்.12: நாகையில் பணியில் இருந்த காவலர்களை தாக்கி தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் வெளிப்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் 3 காவலர்கள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தினர்.