அஞ்சுகிராமம்,பிப்.12: மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவர்கள் ஜெனிஸ்டன் ரிஜோ, ஜெப்ரி .ஜெ.ஆல்பன், ரேச்சல் அனன்யா ஆகியோர் ஸ்பெல் பீ போட்டிகளில்முதலிடம் பெற்றுள்ளனர்.தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் மாணவன் சகாய நிதிஷ்,ஹியூப்ரிட்டா ஜெருத், சபீகா டயஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும் அனைத்து தென்னிந்திய மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி அளவில்நடைபெற்ற ஓவியம் மற்றும் கைவினைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளித்தாளாளர் தில்லைசெல்வம், பள்ளி முதல்வர் தீபசெல்வி, பள்ளி இயக்குநர்கள் முகிலரசு, ஆடலரசு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனி ரீனாசேவியர், ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.