மொடக்குறிச்சி, பிப். 12: கொடுமுடி கோயிலில் நேற்று முன்தினம் நடிகை ஷகிலா சாமி தரிசனம் செய்தார். கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நிவர்த்தி செய்யும் பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் நடிகை ஷகிலா நேற்று முன்தினம் கொடுமுடி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.