ஈரோடு, பிப். 12: இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மதிய உணவு இடைவேளையில் பி.எஸ்.என்.எல் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஏ (சஞ்சார் நிகாம்) மாவட்ட செயலாளர் சண்முகம், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கடந்த ஜனவரி மாதம் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்.