வருசநாடு, பிப்.11: கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய தலைவர் கூட்டமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடமலை மயிலை முன்னாள் ஒன்றிய சேர்மன் முருக்கோடை ராமர் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துரைச்சாமிபுரம் ஊராட்சித் தலைவர் மாயகிருஷ்ணன் கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக தும்மக்குண்டு ஊராட்சி தலைவர் பொன்னழகுசின்னகாளை, செயலாளராக மந்திசுனை மூலக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, பொருளாளராக மேகமலை ஊராட்சி தலைவர் பால்கண்ணன், துணைசெயலாளராக பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.