தேனி, பிப். 11: தேனி அருகே வீரபாண்டியில் செயல்பட்டு வரும் செவிலியர் பயிற்சி கல்லுாரியில் படிக்கும் மாணவிகள் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும், ரோமியோக்களின் தொல்லைகளாலும் சிரமப்பட்டு வருகின்றனர். தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பயிற்சி கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் பெரும்பாலும் விடுதியிலேயே தங்குகின்றனர். இங்கு துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் துப்புரவு பணிகளை மாணவிகளே மேற்கொள்ள வேண்டி உள்ளது. சமையல் பாத்திரங்களை கூட மாணவிகள் சுத்தம் செய்யும் நிலை காணப்படுகிறது. தவிர பாதுகாப்பு இன்மை தான் இங்குள்ள மிகப்பெரிய பிரச்னை. இங்கு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இரவு வாட்ச்மேன் கிடையாது. சுற்றுச்சுவரும் உயரம் குறைவாக உள்ளது. இதனால் இரவில் ரோமியோக்களும், குடிமகன்களும், சட்டவிரோத செயல் செய்பவர்களும் மருத்துவமனைக்குள் புகுந்து விடுகின்றனர்.