திருவள்ளூர், பிப். 11: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில், பூண்டி எரிக்கரையையொட்டி உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களை, சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், புல்லரம்பாக்கம் பகுதியில், சாலையோரம் பூண்டி எரிக்கரை உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தனர். இதையடுத்து, அங்கு, ‘’பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். அத்துமீறி யாரும் நுழையக்கூடாது’’ என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உத்தரவையும் மீறி ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த பருவத்தில் நெல் விவசாயம் செய்தனர்.