பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் நகை, பணம் கொள்ளை

சேலம், பிப்.11: சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி கண்ணம்மாள்(60). அதேபகுதியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி கண்ணம்மாள் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தனர். பின்னர் பீரோவை திறக்க செய்து, அங்கிருந்த 2 பவுன் எடை கொண்ட 5 தங்க கம்மல், 1 பவுன் மோதிரம், மற்றும் ₹30ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என கூறி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணம்மாள் சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முகமூடி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: