அரவக்குறிச்சி, பிப்.11: குடியிருப்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நிறைவு நாள் நிகழ்ச்சி பள்ளபட்டியில் நடைபெற்றது. பள்ளபட்டியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளர் எம் எஸ் மணியன் தலைமை தாங்கினர். நகரச் செயலாளர்கள் பள்ளபட்டி தோட்டம் பசீர் அகமது, அரவக்குறிச்சி அண்ணாதுரை, சிறுபான்மை மாநில பிரிவு முனவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடந்த 10 நாட்களாக வீடு வீடாக நடந்து வந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை, திமுக மாவட்ட பொறுப்பாளரும் அரவை எம் எல் ஏ வு மான செந்தில் பாலாஜி முடித்து வைத்து, மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது எனவே அந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், இதை ஆதரிக்கும் மாநில அரசின் போக்கை எதிர்ப்பதாகவும் பேசினார், இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனார்.