நீடாமங்கலம், பிப். 7: நீடாமங்கலம் அருகில் உள்ள நிக்ரா தத்து கிராமமான ராயபுரம் கிராமத்தில் வெள்ளத்தை தாங்கி வளரும் சி.ஆர் 1009 சப் 1 நெல் ரக வயல் தின விழா நடந்தது. விழாவிற்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். மண்ணியியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா கலந்து கொண்டு பேசுகையில், இந்த ரகமானது வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய ரகமாகும். 150 நாட்கள் வயதுடைய சம்பா பருவத்திற்கு ஏற்றதும், நீண்ட கால உயர் விளைச்சல் தரக்கூடிய மோட்டா ரகமாகும். 14 முதல் 17 நாட்கள் வரை வெள்ள நீரில் மூழ்கி இருந்தாலும் தாங்கி வளரும் தன்மை கொண்டது என்றார்.