திருத்துறைப்பூண்டி, பிப். 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாளையொட்டி சுகாதார விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் சுகாதாரத்தை நன்கு பின்பற்றிய முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜாராமன் தலைமை வகித்தார். நுகர்வேர் பாதுகாப்புமைய விளக்குடி கிளை செயலாளர் செல்வம் வரவேற்றார்.