காந்தி மகளிர் கல்லூரியில் 5ம் ஆண்டு விளையாட்டு விழா

திருச்செங்கோடு, பிப்.7:திருச்செங்கோடு  அருகேயுள்ள கந்தம்பாளையம் காந்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்,  5ம்  ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் சண்முகசுந்தரம்  தலைமை வகித்தார்.  மாணவி வினிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் லோகேஸ்வரன்,  காந்தி மெட்ரிக் பள்ளி முதல்வர் சுரேஷ் ஆகியோர் கலந்து  கொண்டனர்.  இயக்குனர் வித்யா சிவா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஒலிம்பிக் கொடியை  லோகேஸ்வரனும், விளையாட்டுக்கொடியை முதல்வர் சுரேசும் ஏற்றி  வைத்தனர். முதல்வர்  செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகளை தாளாளர் சண்முகசுந்தரம் மற்றும்   சிறப்பு விருந்தினர்கள்  வழங்கினர். இயக்குனர் சிவா நன்றி கூறினார்.

Related Stories: