தேவதானப்பட்டி, பிப். 6: தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சளாறு அணை பாசன பரப்பு நிலங்களில் தற்போது நெற்பயிர்களில் நோய் தாக்க வாய்ப்புள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சளாறு அணை பாசனம் மூலம் டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் தற்போது நெல் பயிர்கள் வளர்ச்சி முதல் முதிற்சி பருவம் வரை உள்ளது. தற்போது நிலவும் தட்பவெட்ப நிலை காரணமாக நெல் பயிரில் பூச்சி நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே, நெல் வளர்ச்சி பருவத்தில் இலைச்சுருட்டுபுழு, தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு ட்ரைசோபாஸ் 500மில்லி அல்லது பிப்ரோனில் 500மில்லி, தெளித்து கட்டுப்படுத்தலாம். இலைச்சுருட்டுபுழு தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரைக்கோகிரம்மா கைலோனில் முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.