மூணாறு, பிப்.6:மூணாறில் பழமை வாய்ந்த தினசரி காய்கறி சந்தையில் 10 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட புதிய நடைபாதை திறக்கப்பட்டது. மூணாறில் பழமை வாய்ந்த காய்கறி சந்தையா உள்ளது. இந்த சந்தையில் மூணாறில் உள்ள அனைத்து தோட்டத்தொழிலாளர்கள், உணவு விடுதியினர் காய்கறிகளை தினந்தோறும் வாங்கி சென்று வருகின்றனர். தினமும் ஏரளமான பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில் நடைபாதைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதன் காரணமாக சந்தைக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வந்தனர். மேலும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.