மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

மூணாறு, ஏப். 23: கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறதது. இதன் ஒரு பாகமாக இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கலால் துறை மற்றும் காவல் துறையினர் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பகுதியான மூணாறை அடுத்த நாமக்கல் மேடு வனப்பகுதியில் கலால் துறை சிறப்பு அதிகாரி வினோத் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது பாறை இடுக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 285 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊரல் பேரல்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: