சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற சாயர்புரம் போப் கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா

ஏரல், பிப். 4: சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சாயர்புரம் போப் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். சர்வதேச மிஷன் ஒலிம்பிக் இண்டோ நேபாள் சாம்பியன் தடகள விளையாட்டு போட்டிகள், நேபாள் போக்ராவில் நடந்தது. இதில், வட்டு எறிதல் போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி சார்பில் பொருளாதார துறை மாணவர் சதீஷ் கலந்து கொண்டார். போட்டியில் இவர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பேராயரும், கல்லூரி தாளாளருமான எஸ்.இ.சி. தேவசகாயம், கல்லூரி முதல்வர் இம்மானுவேல், உடற்கல்வி இயக்குநர் ஜோன்ஸ் ராஜன், பேராசிரியர்கள் ஹென்றிபாண்டியன், சாந்தி பொன்இந்திரா, மனுநீதி செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினர்.

Related Stories: