அணைக்கட்டு, ஜன. 31: அணைக்கட்டு அடுத்த புலிமேடு கிராமத்தில் நடந்த மாடு விடும் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் எதிர்பாரதவிதமாக 8 பேர் மாடு முட்டி படுகாயமடைந்தனர். அணைக்கட்டு தாலுகா புலிமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையொட்டி காளைவிடும் விழா நேற்று நடந்து. விழாவை உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி விழாவை தொடங்கி வைத்தார். தாசில்தார் முரளிகுமார், துணை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர். காலை 10 மணியளவில் தொடங்கிய விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 80 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னரே ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன. விழாவை காண புலிமேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு விழாவை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். ஒவ்வோரு காளைகளும் 2முதல் மூன்று சுற்றுகள் வரை விடபட்டன. தொடர்ந்து விழா மதியம் 1.30 மணியளவில் முடிக்கப்பட்டது.