முள்ளக்காடு அருகே தந்தையை தாக்கிய மகன் கைது

ஸ்பிக்நகர், ஜன.31: முள்ளக்காடு அருகே தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த  மகன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளிஅய்யாசாமி (49). இவருடைய மூத்தமகன் ஆறுமுகநயினார் கொத்தனார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்ததால் அய்யாசாமி மகனை கண்டித்துள்ளார்.இந்நிலையில் தந்தை, மகனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார்  தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில்  முத்தையாபுரம் எஸ்ஐ சதிஷ் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகநயினாரை கைது செய்தார்.

Related Stories: