தூத்துக்குடியில் தொழிலாளி பைக் எரிப்பு

தூத்துக்குடி, மே 17: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த திருமணி மகன் காளிமுத்து(35). இவர், தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். ‘நேற்று காலை பார்த்தபோது பைக் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தபோது, அவரது பைக் அடுத்த தெருவில் உள்ள குப்பை மேட்டில் மர்ம நபர்களால் திருடப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து காளிமுத்து அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு, பைக்கை திருடி எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் தொழிலாளி பைக் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: