சேந்தமங்கலம், ஜன.30: கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையத்தில், கடை முன்பு மது போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்ட உரிமையாளர், சரமாரியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், 5 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு பகுதியைசேர்ந்தவர் மோகன்குமார்(28). இவர் செம்மேடு பஸ் நிலையத்தில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், செம்மேடு அருகே உள்ள கடையங்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தனஜெயன்(21), சீரங்கன் மகன் தினேஷ் குமார் (21), கூச்சகராய்ப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித்குமார்(21), ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார்(21), பெருமாப்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (21) ஆகிய 5 பேரும், மோகன்குமாரின் கடை முன்பு, குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.