நாமக்கல், ஜன.30: சாலை ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், 35 வயதுக்கு மேற்படாதவராகவும், ஐடிஐ (கட்டுமான வரை தொழில் அலுவலர்) சான்றிதழ் கல்வித்தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும். காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இனசுழற்சி முறை, மாதிரி விண்ணப்ப படிவம் உள்பட இதர விவரங்கள் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.