அவிநாசி, ஜன.30: அவிநாசி வட்டார பகுதிகளில் குறைந்த மின் அழுத்தமின்றி மின்சாரம் சீராக வழங்குவதற்காக பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில், புதிதாக அமைக்கப்பட் 110/33 கே.வி திறன் கொண்ட மின்மாற்றியை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ஜவஹர், அவிநாசி மின்கோட்ட செயற்பொறியாளர் விஜயஈசுவரன், உதவிசெயற்பொறியாளர் நாச்சிமுத்து, பெருமாநல்லூர் உதவிமின் பொறியாளர் அன்பழகன், ஒன்றிய துணைத்தலைவர் தேவிஸ்ரீ நந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் வேல்குமார்சாமிநாதன், யூனியன் கவுன்சிலர்கள் ரத்னாம்பாள் சிவசாமி, ஐஸ்வர்யமகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தாமணி வேலுச்சாமி, ராதாமணி சிவசாமி, ரேஜிஸ், சுலோச்சனா வடிவேல், பெருமாநல்லூர் ஊராட்சித் துணைத்தலைவர் சி.டி.சி. வேலுச்சாமி மற்றும் மின் வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.