திருட்டு மணல் 3 லாரிகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, ஜன. 29: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்துவதாக நேற்று ஆரம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் ஒவ்வொரு வாகனங்களாக சோதனை செய்தனர். சோதனையின்போது ஆந்திராவிலிருந்து திருட்டு மணல் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் 3 பேரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலைத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: