தேனி, ஜன.28: திருச்சி வியாபாரிகள் தேனி மாவட்டத்திற்கு வந்து ஒரு ஏக்கர் பரப்பில் விளைந்துள்ள மக்காச்சோள கதிர்களை 35 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து, அவர்களே அறுவடை செய்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி நடைபெறுகிறது. முழுமையாக விளைந்த மக்காச்சோளத்தை மாட்டுத்தீவனம், சத்துமாவு தயாரிக்கும் கம்பெனிகள், பிஸ்கெட் கம்பெனிகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு நல்ல வருவாய் கிடைக்கிறது. இது குறித்து தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது திருச்சி மார்க்கெட்டில் இருந்து தேனி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள வியாபாரிகள் 60 நாள் முதல் 70 நாட்களுக்கு உட்பட்ட மக்காச்சோள கதிர்களை, அவர்களே ஆள் வைத்து அறுவடை செய்து ஏற்றிச் செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர்.