மதுரை, ஜன. 28: மோட்டார் மின்இணைப்பிற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட உதவிப்பொறியாளர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை மாவட்டம், நிலையூர் சம்பக்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், விவசாயியான இவர், தனது தோட்டத்திற்கு மின்மோட்டார் இணைப்பு கேட்டு திருநகர் மின்சாரவாரிய அலுவலகத்தில் கடந்த 2004ல் விண்ணப்பித்தார். அப்போது மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் திருநகரைச் சேர்ந்த உதவிப் பொறியாளர் விஜயகுமார் (ஓய்வு பெற்றவர்) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் விஜயகுமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.