முத்துப்பேட்டை அரசு பள்ளியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

முத்துப்பேட்டை, ஜன.28: முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வருவாய்த்துறை சார்பில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் ஒவ்வொரு வாக்குகளும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அதனைதொடர்ந்து ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் அணைத்து மாணவர்கள் கைகளை நீட்டி தேசிய வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: