நாமக்கல், ஜன.28: நாமக்கல்லில் நகர திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம், நகர பொறுப்பாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் குமணன், திருவெற்றியூர் வாசுகருணாநிதி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன், மாவட்ட அவைத்தலைவர் உடையவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், விமலாசிவக்குமார், மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர பொறுப்புக்குழு உறுப்பினர் அன்பரசு நன்றி கூறினார்.