ஈரோடு, ஜன.24: ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் கடந்த 3 வாரத்தைவிட இந்த வாரம் கூடுதலாக மாடுகள் வரத்தானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்ததோறும் புதன் மற்றும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுகிறது. இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். உள்ளாட்சி தேர்தல், பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததால் கடந்த 3 வாரத்தை காட்டிலும் நேற்று அதிகளவில் மாடுகள் வரத்தானது.