திருவாரூர், ஜன.24: திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிகளில் மழைநீர் கட்டமைப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று 2வது நாளாக திருவாரூரில் கொரடாச்சேரி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. இதில் பயிற்சி முகாமினை துவக்கி வைத்து கலெக்டர் ஆனந்த் பேசுகையில், கிராம ஊராட்சிகளில் நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்காக இந்த பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. இதில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது, அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது, நிதி வருவாய் மற்றும் செலவினம் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத்தவிர ஊராட்சி நிர்வாகம் குறித்து 5 நாள் பயிற்சி வகு ப்பு விரைவில் அளிக்கப்பட உள்ளது.