ராசிபுரம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு

ராசிபுரம், ஜன.24: ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில், நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகளுக்கு மனநலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மனநல ஆலோசகர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மனநல மருத்துவர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு மனநலம் குறித்து சிறப்புரையாற்றினார். பேராசிரியர் இந்திராணி, கிருபாதேவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: