திருச்செங்கோட்டில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

நாளை நடக்கிறதுதிருச்செங்கோடு, ஜன.24:  திருச்செங்கோடு  சட்டையம்புதூரில் நாளை (25ம் தேதி) மாலை 5 மணிக்கு நகர திமுக சார்பில்  மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்  நடக்கிறது. நகர  செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகிக்கிறார். 16வது வார்டு செயலாளர்  மணிவாசகம் வரவேற்கிறார். மாநில விவசாய அணி செயலாளர் கரூர்  சின்னசாமி,  நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ, தலைமை கழக  பேச்சாளர் கோட்டூர் முருகன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.  முன்னதாக பாடகர் பன்னீரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. கூட்டத்திற்கு  மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணியினர்,  கட்சி முன்னோடிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: