உத்தமபாளையம், ஜன.24: உத்தமபாளையம் தி கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு விபத்துக்களை தடுப்பது பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டன. உத்தமபாளையம் தி கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவினை கொண்டாடும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் கல்விமாவட்ட அலுவலர் திருப்பதி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், பள்ளி கல்வி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். போட்டிக்கான வழிகாட்டுதல்கள் பற்றி பள்ளி முதல்வர் ஜியாவுல்ஹக் மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து விபத்தில்லா வாழ்வினை வாகனம் ஓட்டுபவர்கள் அடைவது பற்றி கட்டுரை, பேச்சுப்போட்டிகள், வினாடிவினா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பு பற்றி வட்டார போக்குவரத்து அதிகாரி விளக்கினார். ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் சாகுல்அமீது நன்றி கூறினார்.