திருமங்கலம் அருகே வாலிபர் எரித்துக்கொலையா? சாக்கு மூட்டையில் கிடந்த தலை

திருமங்கலம், ஜன.24:  திருமங்கலம் அருகே சாக்கு மூட்டையில் வாலிபரின் தலை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் வெங்கடேசன்(21). பந்தல் போடும் தொழிலாளி. கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்ற வெங்கடேசன் திடீரென மாயமானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் புதுப்பட்டியை அடுத்த குன்னத்தூரில் சாலையோரத்தில் கிடக்கும் சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் எரிந்த நிலையில் மனிதத்தலை மட்டும் கிடந்தது. இது தொடர்பாக கல்லுப்பட்டி போலீசார் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

டிஎஸ்பி அருண் தலைமையில் சென்ற போலீசார் எரிந்த நிலையில் கிடத்த தலையை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது மாயமான வெங்கடேசனின் தலையாக இருக்குமோ என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இது தொடர்பாக புதுப்பட்டியை சேர்ந்த ரமேஷ், முத்துப்பாண்டி உள்ளிட்ட சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசின் தாய் தனம் கூறுகையில், ‘‘கடந்த 11ம் தேதி முத்துபாண்டி, ரமேஷ் ஆகியோர் வெங்கடேசனை வேலைக்கு அழைத்து சென்றனர். அதன்பின் அவன் வீடு திரும்பவில்லை’’ என தெரிவித்தார். வாலிபர் மாயமான நிலையில் சாலையோரத்தில் தலை கண்டெக்கப்பட்ட சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: