திருமங்கலம், ஜன.24: திருமங்கலம் அருகே சாக்கு மூட்டையில் வாலிபரின் தலை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் வெங்கடேசன்(21). பந்தல் போடும் தொழிலாளி. கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்ற வெங்கடேசன் திடீரென மாயமானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் புதுப்பட்டியை அடுத்த குன்னத்தூரில் சாலையோரத்தில் கிடக்கும் சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் எரிந்த நிலையில் மனிதத்தலை மட்டும் கிடந்தது. இது தொடர்பாக கல்லுப்பட்டி போலீசார் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.