நாகை, ஜன.24: வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தங்கியிருந்த திருவாரூரைச் சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். வேளாங்கண்ணியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காத்தன்குடி மணலியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ஆனந்த்(35) கடந்த 21ம் தேதி தங்கினார். நேற்றுமுன்தினம் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து விடுதி நிர்வாகம் சார்பில் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.